"கொரோனாவின் 2வது அலை இன்னும் முடியவில்லை" - லவ் அகர்வால்
தேசிய அளவில் கொரோனாவுக்கு அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சசராக இருப்பவர் லவ் அகர்வால். இவர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே கொரோனாவுக்கு அதிக அளவில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் கொரோனாவுக்கு அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தொடர்பாக இறுதி முடிவுக்கு காத்திருக்கிறோம்.
கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 222 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. நாட்டில், கேரளாவின் 10 மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது. இந்த 18 மாவட்டங்களும் மொத்த பாதிப்பில் 47.5% பாதிப்புகளை கொண்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை இன்னும் முடியவில்லை. ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பக்க இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
