பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு - முதல்வருக்கு நன்றி கூறிய அற்புதம்மாள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் முன்னதாக 30 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இதையடுத்து சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளிவந்து பரோலில் இருந்த பேரறிவாளனின் பரேல் இப்போது மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் இருந்து 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அவர்கள், “30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்று டிவிடட்ரில் பதிவிட்டுள்ளார்.
ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
— Arputham Ammal (@ArputhamAmmal) June 28, 2021
????????
(2/2)
