ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை எதிர்த்து விளையாடினார். அதில், 3-2 என்ற புள்ளிக் கணக்கில் லவ்லினா வெற்றி பெற்று காலிறுதிக் தகுதிப் பெற்றார்.
இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. அதில் மகளிர்க்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியின் 69 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றது.
அதில், இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை எதிர்த்து விளையாடினார். அதில், 3-2 என்ற புள்ளிக் கணக்கில் லவ்லினா வெற்றி பெற்று காலிறுதிக் தகுதிப் பெற்றார்.

காலிறுதியில் லவ்லினா வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு பதக்கத்தை உறுதி செய்வார்.
Onwards! ????????
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 27, 2021
Power packed punching from Lovlina Borgohain lands her a last eight slot as she wins 3-2 against Nadine Apetz of #GER in the women's 69kg welterweight category! ???? #IND #Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | @LovlinaBorgohai pic.twitter.com/Y9rserNmyR
