ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி!
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில், ஹாங்காங் வீராங்கனை நான் யி செங்-கை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் பி.வி. சிந்து அபாரமாகச் செயல்பட்டார். முதல் செட்டை 21-9 எனவும், 2-வது செட்டை 21-16 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில், பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை, மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள பி.வி.சிந்து ‘ஜே’ பிரிவில் இடம்பெற்றுள்ளார்.
கடந்த 25ம் தேதி நடைபெற்ற முதல் லீக் போட்டியில், சிந்து இஸ்ரேல் வீராங்கனை க்சேனியா பொலிகார்போவாவை எதிர்கொண்டார் அதில், முதல் செட்டை, 21-7 என்ற செட் கணக்கிலும், இரண்டாவது சுற்றை, 21-10 என்ற புள்ளிக்கணக்கிலும் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில், ஹாங்காங் வீராங்கனை நான் யி செங்-கை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் பி.வி. சிந்து அபாரமாகச் செயல்பட்டார். முதல் செட்டை 21-9 எனவும், 2-வது செட்டை 21-16 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற சிந்து, குரூப்பில் முதல் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
#IND's PV Sindhu advances to the knock-out stage after defeating #HKG's Cheung Ngan Yi 21-9, 21-16 in women's #Badminton singles. ????????#Olympics | #StrongerTogether | #UnitedByEmotion | #Tokyo2020 @Pvsindhu1 pic.twitter.com/7sJerM3P1C
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 28, 2021
