சென்னையில் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை (பயோ டேட்டா, அலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் இதர விவரங்களுடன்) “முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை - 600 008” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
சென்னை நகர வடக்கு கோட்டத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் தேர்வு நடைபெறுகிறது. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 50 வரை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பங்களை, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை (பயோ டேட்டா, அலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் இதர விவரங்களுடன்) “முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை - 600 008” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10.08.21
பணிபுரியும் இடங்கள்:
தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் சென்னை நகர வடகோட்டத்தின் பூங்கா நகர், வேப்பேரி, எழும்பூர், போர்ட் செயின்ட் ஜார்ஜ், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ஷெனாய் நகர், அமைந்தகரை, சேத்துப்பட்டு, ஐ.சி.எஃப், வியாசர்பாடி, அண்ணா நகர், தண்டையார்பேட்டை, ஜவஹர் நகர், பிளவர்ஸ் ரோடு, புரசைவாக்கம், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் மேற்கு, சென்னை உயர் நீதிமன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பணி புரியலாம்.
மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:
முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை - 600 008. தொலைபேசி எண் :044- 2827 3637; மின்னஞ்சல் முகவரி: sreeanrindiapost@gmail.com''.
இந்த விடியோவை தவறவிடாதீர்கள்!!!