அஸ்ஸாம் - மிசோரம் எல்லையில் மோதல்: 6 போலீஸார் பலி!
சோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழு, பணியில் இருந்த அஸ்ஸாம் காவல்துறையினர் மீது கம்பு, கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அஸ்ஸாம் மாநில காவல்துறையினர் 6 பேர் உயிரிழந்தனர்.
அஸ்ஸாமின் கச்சார் மற்றும் மிசோரமின் கோலாசிப் மாவட்டத்திற்கு இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக, அய்தலாங் நார் என்ற பகுதியை அஸ்ஸாம் காவல்துறையினர், கடந்த ஜூன் மாதம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நாள் முதலாக அங்குப் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
எல்லைப் பிரச்சனை நேற்று விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழு, பணியில் இருந்த அஸ்ஸாம் காவல்துறையினர் மீது கம்பு, கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அஸ்ஸாம் மாநில காவல்துறையினர் 6 பேர் உயிரிழந்தனர். மிசோரம் காவல்துறையினர் இயந்திரத் துப்பாக்கி வைத்துத் தாக்குதல் நடத்தினர். என, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், ”இந்த தாக்குதலில், 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர், காயமடைந்துள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.
இரு, மாநில எல்லையிலிருந்த குடிசைகள், அரசு வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. சாலையில் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், அங்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு எல்லையிலிருந்த இரு மாநில காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டனர்.
I am deeply pained to inform that six brave jawans of @assampolice have sacrificed their lives while defending constitutional boundary of our state at the Assam-Mizoram border.
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 26, 2021
My heartfelt condolences to the bereaved families.
